<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5446760</id><updated>2011-04-22T03:01:28.189+08:00</updated><title type='text'>தமிழா!</title><subtitle type='html'>&amp;#2962;&amp;#2992;&amp;#3009; &amp;#2980;&amp;#2990;&amp;#3007;&amp;#2996;&amp;#2985;&amp;#3007;&amp;#2985;&amp;#3021; &amp;#2986;&amp;#3006;&amp;#2992;&amp;#3021;&amp;#2997;&amp;#3016;&amp;#2965;&amp;#2995;&amp;#3021;, &amp;#2949;&amp;#2985;&amp;#3009;&amp;#2986;&amp;#2997;&amp;#2969;&amp;#3021;&amp;#2965;&amp;#2995;&amp;#3021;, &amp;#2970;&amp;#3007;&amp;#2984;&amp;#3021;&amp;#2980;&amp;#2985;&amp;#3016;&amp;#2965;&amp;#2995;&amp;#3021;, &amp;#2965;&amp;#2979;&amp;#2997;&amp;#3009;&amp;#2965;&amp;#2995;&amp;#3021; &amp;#2990;&amp;#2993;&amp;#3021;&amp;#2993;&amp;#3009;&amp;#2990;&amp;#3021; &amp;#2965;&amp;#3007;&amp;#2993;&amp;#3009;&amp;#2965;&amp;#3021;&amp;#2965;&amp;#2994;&amp;#3021;&amp;#2965;&amp;#2995;&amp;#3021; .....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizha.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizha.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Thamizha!</name><uri>http://www.blogger.com/profile/13347443922925544827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>5</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5446760.post-107194772852329486</id><published>2003-12-21T03:15:00.000+08:00</published><updated>2003-12-21T03:16:24.060+08:00</updated><title type='text'></title><content type='html'>பொதுவாக தமிழர்கள் தமிழில் ஒரு சேவை இல்லை என்றால் குறைபட்டுகொள்கிறார்கள். ஆனால் அதை தமிழில் கொடுத்தால் பயன்படுத்துவது கிடையாது. அதற்கும் பல காரணங்களை சொல்லிவிடுவார்கள்.&lt;br /&gt;இன்று பிளாக்ஸ்பாட் போன்ற நிறுவனங்கள் தமிழ் சேவையை சரியாக வழங்கவில்லை என்று சிலர் பிளாக்ஸ்பாட் குழுவில் குறைப்பட்டுகொண்டார்கள். ஆனால் தமிழிலில் இத்தகைய சேவைகளை யார் வேண்டுமானுல் எளிதாகக் கொடுக்க முடியும் என்பது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. &lt;br /&gt;இது சம்மந்தமாக ஒரு மடலை இன்று நான் தமிழ்பிளாக்ஸ் குழுவிற்கு அனுப்பினேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று (21 டிசம்பர் 2003) தமிழ்பிளாக்ஸ் யாகூ குழுவிற்கு நான் அனுப்பிய மடல்...&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;blogger.com/blogspot.com போன்ற சேவை நிறுவனங்கள் தங்கள் சேவையையில் தமிழை&lt;br /&gt;சேர்க்கவில்லை , அல்லது கட்டன சேவையை நிறுத்திவிட்டார்கள் என்று இங்கு அடிக்கடி மடல்களை&lt;br /&gt;பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழுக்கு என்று தனியாக இத்தகைய, ஏன் அவற்றைவிட தரமான வலைப்பூ சேவையை தமிழுக்கு&lt;br /&gt;தரமுடியும் என்பது, அது வெகு வெகு சுலபானது என்பது உங்களுக்கு தெரியுமா???&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கெல்லாம் தேவை உங்கள் உதவிதான். இத்தகைய தளங்களில் வலைப்பூவுக்கென்று சில மென்பொருட்கலை&lt;br /&gt;அவர்கள் சேவையகத்தில் பயன்படுத்துவார்கள். அதை பயன்படுத்தி வலைப்பூ சேவையை&lt;br /&gt;blogger.com/blogspot.com போன்ற நிறுவனங்கள் தருகின்றன. அவர்களைப்பொருத்தவரை, தமிழ்&lt;br /&gt;மொழிக்கென்று தனியான சந்தை இல்லை என்றால் தமிழைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். அவர்களிடம்&lt;br /&gt;பேசி புன்னியம் இல்லை. அவர்களையும் குறைசொல்லக் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தீர்வு தமிழர்களின் நிறுவனங்கள் இத்தையகைய வலைப்பூ சேவையை அளிக்க ஆரம்பிக்கவேண்டும்.&lt;br /&gt;அல்லது நாமே நம் வலைதளத்தில் வலைப்பூ அமைக்கத்தேவைப்படும் மென்பொருட்களை நிறுவி, self&lt;br /&gt;hosted  blogs ஆக உருவாக்கிக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்பர் வெங்கட் தன் வலைத்தளத்தில் பயன்படுத்துவதும் அத்தகைய ஒரு வலைப்பூ மென்பொருள்தான். அந்த&lt;br /&gt;மெம்பொருளின் பெயர் movabletype என்பதாகும் இதன் வலைப்பக்கம்&lt;br /&gt;http://www.movabletype.org/ . அது தற்போது தமிழில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை&lt;br /&gt;ஆனால் அது சுதந்திர/தளையறு மென்பொருள் இல்லை என்றே நினைக்கிறேன். இதனை நன்பர் வெங்கட்&lt;br /&gt;தமிழ்படுத்தியுள்ளாரா என்ற விசயம் தெரியவில்லை [&lt;br /&gt;http://www.movabletype.org/resources.shtml#languages என்ற சுட்டியில் தமிழ்&lt;br /&gt;மொழியை கானவில்லை].&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் ஆற்றலுடைய ஒரு சுதந்திர வலைப்பூ சேவையக மென்பொருளும் உள்ளது அதன் பெயர்  Nucleus&lt;br /&gt;CMS என்பதாகும். இதன் வலைப்பக்கம்: http://nucleuscms.org/&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நியூக்ளியஸ் சுதந்திர மென்பொருளாக (released under GPL License) இருப்பதால் இதனை&lt;br /&gt;தமிழ் படுத்துவது சாத்தியம் மற்றும் அவசியமும் கூட.. [இப்போதைக்கு இது கிடைக்கும் மொழிகளை இங்கு&lt;br /&gt;பாருங்கள்: http://nucleuscms.org/languages.php ]&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நியூக்ளியள் தமிழில் இருந்தால் ,அவரவர் தங்கள் வலைத்தளத்தில் சொந்தமாக ஒரு&lt;br /&gt;வலைப்பூவை(தமிழ் interface உடன் ) அமைத்துக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதனை தமிழ் படுத்துவதுவதற்கு எவ்வளவு முயற்சி செய்யவேண்டும் என்று கேட்கிறீர்களா...&lt;br /&gt;சிரியதும் பெரியதுமாக ** 640 ** கட்டளை வரிகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் அவ்வளவே...&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தான் உங்களிடம் உதவ சொல்லிகேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டளை வரிகளின் பட்டியலை ஏற்கனவே நான் இக்குழுவின் வலைப்பக்கத்தில் இட்டுள்ளேன்:&lt;br /&gt;http://groups.yahoo.com/group/tamilblogs/files/nucleusblog.xls&lt;br /&gt;இந்த கோப்பை பதிவிறக்கம் செய்து, மொழிபெயர்த்து அனுப்பினால், தமிழ் வலைப்பூ மென்பொருளை -&lt;br /&gt;தமிழ் நியூக்ளியஸை,  உங்களுக்கு உருவக்கித் தரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நானே செய்ய நினைத்தால், ஒரு ஞாயிற்றுகிழமை உட்கார்ந்தால் முடித்துவிட முடியும். ஆனால்&lt;br /&gt;தற்போது என்னுடைய முடிக்க முடியாமல் கிடக்கும் தமிழாக்க வேலைகள் பட்டியல் பெரிதாகிக்கொண்டே&lt;br /&gt;போகிறது....[உதா: தமிழா 1.5 க்கு இன்னும் 2800 வரிகள் (மொத்த வரிகள் கிட்டதட்ட 9600)&lt;br /&gt;மொழியாக்கப்படாமல் இருக்கிறது.]&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இதை நான் ஒருவனே செய்வது அவ்வளவு ஆரோக்கியமான விசயமாக இருக்காது. சமூகப் பங்களிப்பு&lt;br /&gt;  (community participation) வளர வேண்டும்/வளர்க்கவேண்டும்,  இதுவும் சுதந்திர/தளையறு&lt;br /&gt;செயலி சிந்தாந்தத்தில் ஒரு அங்கம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாருங்கள் தமிழர்களே...கணினி தொழில் நுட்பத்தைத் தமிழில், தமிழருக்கு அளிக்க, நீங்களும் வடம்&lt;br /&gt;பிடிங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;முகுந்தராஜ்&lt;br /&gt;&lt;br /&gt;[&lt;br /&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இது சம்மந்தமாக என் முந்திய மடல்களையும் பார்க்கவும்:&lt;br /&gt;http://groups.yahoo.com/group/tamilblogs/message/192&lt;br /&gt;http://groups.yahoo.com/group/tamilblogs/message/193&lt;br /&gt;]&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5446760-107194772852329486?l=thamizha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/107194772852329486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/107194772852329486'/><link rel='alternate' type='text/html' href='http://thamizha.blogspot.com/2003_12_01_archive.html#107194772852329486' title=''/><author><name>Thamizha!</name><uri>http://www.blogger.com/profile/13347443922925544827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5446760.post-106475853554709678</id><published>2003-09-28T22:15:00.000+08:00</published><updated>2003-09-28T22:18:05.843+08:00</updated><title type='text'></title><content type='html'>தமிழரின் இனப்பற்று மற்றும் சமூகச்சிந்தனை இன்னும் மடியவில்லை்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று எகலப்பை- அடுத்தப்பதிப்பு வெளியிட பொருளுதவி வேண்டி  அகத்தியர் மற்றும் தமிழுகிற்கு அனுப்பிய மடலுக்கு அருமையான வரவேற்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைபேர் உதவுவார்கள் என்று நினைக்கவே இல்லை. இருவர் பெயரை குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையில் பணம் அனுப்ப சம்மதித்துள்ளனர். இத்திட்டத்திற்கு தேவையான 1000 அமெரிக்க வெள்ளி எளிதில் சேர்ந்துவிடும்போல் தான் இருக்கிறது. நம் இனம் பொது நலத்திட்டத்திற்கு இவ்வளவு ஆதரவு அளிப்பது பாராட்டத்தக்கது. மிகவும் ஊக்கமளிப்பதாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடிய விரைவில் எகலப்பையின் அடுத்த பதிப்பு தமிழரின் கணினித்் தேவையை பூர்த்திசெய்யும் என்று திடமாக நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;[பத்துபஹாத் நகரில் இருந்து....]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5446760-106475853554709678?l=thamizha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/106475853554709678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/106475853554709678'/><link rel='alternate' type='text/html' href='http://thamizha.blogspot.com/2003_09_01_archive.html#106475853554709678' title=''/><author><name>Thamizha!</name><uri>http://www.blogger.com/profile/13347443922925544827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5446760.post-105863677111085852</id><published>2003-07-20T01:46:00.000+08:00</published><updated>2003-07-20T01:46:11.166+08:00</updated><title type='text'></title><content type='html'>இந்தியா சினிமா...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரவு, வித்யா உணவு விடுதியில் இரவு உணவை சாப்பிட்டுகொண்டு இருக்கும்போது, அங்கே உள்ள தொலைகாட்சியில் ஹிந்தி சினிமா காட்சிகள் ஓடிகொண்டிருந்தது. வழக்கம்போல பாட்டு, ஆட்டம்.... எனக்கு அப்போது 2 வாரங்களுக்கு முன், எங்கள் வாடிக்கை நிறுவணமான சினாய் சீகேட் நிறுவனத்தில் ஒரு சீனப்பெண் இந்தியாவை பற்றி குறிப்பிட்டது நினைவில் வந்தது. அன்று அவர்களுடன் கேண்டீனில் சாப்பிடும்போது, இந்தியாவை பற்றி பேச்சு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய திரைப்படங்களில் வருவது போல் எங்கும் பாட்டு , ஆட்டம் என்று இந்தியா இருக்குமா என்று கேட்டாள். நீங்கள் இந்தியா வந்தால் ஏமாற்றம் தான் அடைவீர் என்று சொல்லிவைத்தேன். சினிமாவில் இருப்பது போன்று இந்தியா இருக்காது. சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்றும் சொல்லிவைத்தேன். மீண்டும் வித்தியா ரெஸ்டாரண்டின் டிவியை பார்த்தேன்... ஹிந்தி நடிகை இடுப்பை குலுக்கி ஆடிகொண்டிருந்தாள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5446760-105863677111085852?l=thamizha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/105863677111085852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/105863677111085852'/><link rel='alternate' type='text/html' href='http://thamizha.blogspot.com/2003_07_01_archive.html#105863677111085852' title=''/><author><name>Thamizha!</name><uri>http://www.blogger.com/profile/13347443922925544827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5446760.post-105500241478326792</id><published>2003-06-08T00:13:00.000+08:00</published><updated>2003-06-08T00:13:34.820+08:00</updated><title type='text'></title><content type='html'>A Mongolian discovers Hinduism in Kadaaram!!!&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஜேபி ஐயாவை பார்க்க, மலேசியா வரும் பல வெளிநாட்டினர் வருவது உண்டு என கேள்விபட்டிருக்கிறேன். அன்மையில் ஒரு மங்கோலிய பெண் அவரை பார்க்க வந்திருந்தார். நானும் அந்த சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றேன். அந்த சந்திப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பினாங்கு எங்கள் அலுவலக தங்கும் விடுதியில்,  நன்பர்கள் அவர்கள் குடும்பத்துடன் அருகிலுள்ள புக்கிட் திஜாவ் என்ற நீர்வீழ்ச்சிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தனர். நான் சுங்கைபட்டாணி ஜேபி ஐயா வீட்டுக் செல்ல புறப்பட்டுகொண்டிருந்தேன். அப்போது ஜேபி ஐயாவிடம் இருந்து தொலைபேசி, அவரை சந்திக்க ஒரு மங்கோலிய மாணவி பினாங்கில் இருந்து சுங்கைபட்டானி வருவதாக சொல்லி கேட்டுகொண்டிருந்ததாகவும். அவர் தொடர்புகொண்டால் அவரையும் அழைத்துவருமாறு கேட்டுகொண்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் தொலைபேசி அடித்தது, பெண் குரல். புரிவதற்கு கடினமான ஆங்கிலம். தன்னை மார்த்தா என்று அறிமுகபடுத்திகொண்டு ஜேபி ஐயாவை சந்திக்க இருப்பதாகவும். தாங்கள் சுங்கைபட்டானி போகும் போது தன்னையும் அழைத்துபோகும்படி கேட்டுகொண்டார். அவர் முகவரியை குறித்துகொண்டு,  என்னைவிட பினாங்கில் அதிகம் சுற்றியுள்ள என் மாராத்தி நன்பரிடம் எப்படி போவது என வழியை தெரிந்துகொண்டு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் டவுன், லோகான் ரோடில் உள்ள அவர் குறிப்பிட்ட அடுக்கு மாடி கட்டிடத்தினை அடைந்து அவரை அழைத்துக்கொண்டு, சுங்கை பட்டானியை நோக்கி வண்டியை செலுத்தினேன். &lt;br /&gt;&lt;br /&gt;பினாங்கில் இருந்து சுங்கை பட்டானி செல்ல கிட்டத்தட்ட 40 நிமிடம் பிடிக்கும்.  தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வரை நீண்டிருக்கும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த நெடுஞ்சாலை கார் ஓட்டுவதே அருமையான அனுபவம். வடக்கே அலோர் செட்டாரில் இருந்து தெற்கே ஜோகூர் வரை கிட்டத்தட்ட மலேசியாவின் இரண்டு கோடிக்கும், இந்த நெடுஞ்சாலையில் தனியாக காரில் சென்றிருக்கிறேன். மலேசியா பெரும்பாலும் நெடுஞ்சாலை ஓரத்தில் காடு, மலை , ரப்பர்மரத் தோட்டம் அல்லது செம்பனைமரத் தோட்டம் தான் கண்ணில் படும். பினாங்கிலிருந்து சுங்கை பட்டானி  செல்லும் பகுதியில் மட்டும் விதிவிலக்காக இந்த நெடுஞ்சாலை , நெல் வயல்கள் ஊடாக செல்லும். இப்பகுதி எனக்கு தமிழகத்தை, குறிப்பாக எங்கள் ஊர் சேந்தமங்கலத்தை ஞாபகப்படுத்தும் (மழைகாலத்தில் மட்டும் எங்கள் ஊரில் நெல் விளையும் மற்றபடி தண்ணியில்லா காடுதான்...) . ஒருசில வீடுகளின் அமைப்பு கூட தமிழகத்தில் நெல் வயலூடே இருக்கும் வீடுகள் போல் தான் தோன்றும்.நான் நினைத்துக்கொள்வேன், கிடாரம் நெற்களஞ்சியமாக இருந்ததால்தான் தமிழ் மன்னர்கள் இதனை வெல்ல வந்தார்களோ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கார் பினாங்கு தீவை Mainlandஉடன் இனைக்கும் புகழ்பெற்ற பினாங்கு பாலத்தின்மேல் [8 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலில் அமைக்கப்பட்ட பாலம் -- இப்படிபட்ட ஒரு பாலத்தினை இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அமைத்து நம் தமிழ்மன்னையும்/தமிழ் மணங்களையும் மேலும் நெருக்கமாக இனைக்கப்போகும் நாள் என்னாளோ????].&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் வந்த மங்கோலிய பெண் அவர் நாட்டை பற்றி அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மெதுவாக சொல்லிக்கொண்டு வந்தார்.  அவருடைய ஒரிஜினல் பெயர் "khishigt battsetseg"(இதனை அவரிடம் எழுதி வாங்கிதான் இங்கு இடுகிறேன். எனக்கு எப்படி இப்பெயரை உச்சரிப்பது என பிடிபடவில்லை..). கல்லூரியில் ஆசிரியர்கள் பெயரை உச்சரிக்க முடியாமல் போனதால், மார்த்தா என்ற மாற்றுப் பெயரால் தன்னை அழைக்க ஆரம்பித்துள்ளார்கள் என தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கல்லூரியில் இந்து மதத்தை பற்றிய ஒரு ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்கவேண்டியிருக்கிறதாம், அதுபற்றி விபரம் சேகரிக்க சில இடங்களில் தேடி இருக்கிறார். அப்போது பினாங்கின் காமாட்சிஅம்மன் கோயில் செயலாளர் கிருஷ்ணன் என்பவர் ஜேபி ஐயாவை பற்றி சொல்லியிருக்கிறார். அவரிடம் சென்றால் தேவையான செய்திகள் கிடைக்கும் என்றுசொல்லி ஜெபி ஐயாவின் தொலைபேசி எண் கொடுத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மங்கோலியர்கள் சீனர்களை போல கானப்பட்டாலும் அவர்கள் மொழி/எழுத்து முறை சீனத்தோடு தொடர்புகொண்டவை இல்லை போலும். அவர்கள் மொழி ருஷ்ய எழுத்துக்களை கொண்டு எழுதப்படுவதாக தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு ஆச்சரியபடத்தக்க விசயம், அவர் படித்ததெல்லாம் மங்கோலிய மொழியில்தானாம். மலேசியாவில் மேற்படிப்புக்கு வருவதற்காக ஆங்கிலத்தை 4 மாதம் crash course  படித்து இங்கு கல்லூரியில் சேர்ந்திருப்பதாக சொன்னார். இப்போது ஆங்கிலத்திலேயே படித்து பரிச்சை எழுதப்போகிறார். [தமிழர் பலர் ஆங்கில மோகத்தில், தமிழ்மொழியை புறக்கனிக்கிறார்கள். அவர்களுக்கு இச்செய்தியை சொல்லவேண்டும். ஒழுங்கா படித்தால், ஆங்கிலத்துக்கு 4 மாதங்கள் போதும். ஆங்கிலத்துக்காக தமிழை புறக்கனிக்கத் தேவையில்லை என்று]&lt;br /&gt;&lt;br /&gt;பேசிகொண்டே சுங்கை பட்டானி ஜேபி வீட்டை அடையும் போது மணி 12.30 இருக்கும். ஐயாவுடன் கொஞ்சம் நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு, சீன கடை ஒன்றுக்கு சாப்பிட கிளம்பினோம். சாப்பிடும்போது ஹிந்துமதம் எவ்வாறு மலேசியாவில் பரவியது என்பதை ஜேபி ஐயா விளக்கிக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு முடிந்தவுடன், சுங்கைப்பட்டானியிலிருந்த துர்கைகோயில்கள் இரண்டினை பார்க்க சென்றோம்.  அவற்றை மார்த்தா படம் எடுத்துகொண்டார். இக்கோயில்கள் பத்தி ஜேபி ஐயா சுருக்கமாக விளக்கம் அளித்தார். அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஜேபி ஐயா வீடு வந்து சேர 3.00 மணிக்கு மேல் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்தவுடன், மார்த்தா தான் தயாரித்துவைத்திருந்த ஹிந்துமதம் பற்றிய கேள்விகளின் பட்டியலை எடுத்தார். அய்யாவின் குரலை பதிவு செய்து பின்னர் மீண்டும் கேட்டு குறிப்பு எடுக்கவிரும்புதாக அப்பெண் தெரிவித்ததால், ஒரு டேப்ரிக்கார்டரை ரெடிசெய்து, பின் questionaire ஆரம்பிக்கப்பட்டது. இந்து மதம்பற்றிய அவரின் கேள்விகளுக்கு நீண்ட விளக்கமான பதில்கள் சரளமாக ஜேபி ஐயாவிடம் இருந்துவந்தது.  பக்தி மார்க்கம் , ஞான மார்கம், கோயில் அமைப்புகள், கோயில் வழிபாடு, விழாக்கள் , துரிகை, அம்பாள் முதலிய கடவுள்கள் பற்றியும் வேதங்களை பற்றியும், ஆன்மா வை பற்றியும் விளக்கினார். அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் புத்தகமோ , குறிப்புகளோ இன்றி ஜேபி ஐயா அவர்கள் விளக்கமான பதில்களை அளித்தது எங்களை ஆச்சரியபட வைத்தது. ஜேபி ஐயாவை ஒரு நடமாடும் என்சைக்கோள்பீடியா என்று சொன்னால் மிகையாகாது.  இவரை ஹிந்து சமயம்/தமிழ் காலாச்சாரம்/வரலாறு ....எந்த subject எல்லாம் மனதில் தோன்றுகிறதோ அதை பற்றியெல்லாம் கேள்விகேட்டு பேச சொல்லி நிறைய பதிந்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று எனக்கு தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி நேரம் நடந்துகொண்டிருக்கும் போது , அருகில் சோபாவில் ஜேபி ஐயாவின் பேத்தி , மங்கோலிய பெண்ணின் கைதொலைபேசியை வைத்துக்கொண்டு விளையாடிகொண்டிருந்தார்.. அவர் எக்குத்தப்பாக கைத்தொலைபேசி பொத்தான்களை அமுக்க ஒரு அழைப்பு அதிலிருந்து சென்றுவிட்டது. (அது மங்கோலியாவில் இருக்கும் மார்த்தாவின் தந்தையின் எண் என பிறகு தெரிந்தது).&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள்/ சந்தேகங்களையும் எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்தப்பிறகு. ஹிந்துக்களின் புனித நூலை பார்க்கவேண்டும் என கேட்க. ஐயா வீட்டுக்குள் சென்று இரண்டு புத்தகங்களுடன் வந்தார். ஒன்று ரிக்வேதம் - [ஜேபி ஐயா இப்புத்தகத்தை இந்தியாவில் இருந்து வாங்கிவரும்போது தரையில் படாமல் எடுத்துவந்ததாக குறிப்பிட்டார்]. இன்னொன்று தமிழ் வேதமாகிய தேவாரத் திருமுறை. இரண்டையும் அப்பெண் படம் எடுத்துக்கொண்டார்.ஜேபி ஐயாவின் துனைவியார் கொடுத்த காபியை குடித்துவிட்டு விடைபெற்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பும்போது மங்கோலிய பென் அவர் நாட்டை பற்றி மேலும் சில செய்திகளை சொல்லிகொண்டு வந்தார். மங்கோலியாவில் இன்றும் கிராமப்புரங்களில் மக்கள் நாடோடிகள் போல் வாழ்வதையே விரும்புவதாக சொன்னார். இவரின் தாத்தா/பாட்டிகள் கூட நகருக்கு வந்தால் கொஞ்சம் நாட்களிலேயே என்ன வாழ்க்கையிது இந்த நகர வாழ்க்கை என வெறுத்துவிடுவார்களாம். அவர்கள் பானியில் மங்கோலிய பனிமலைகளில் ஊர் விட்டு ஊர் செல்லும் நாடோடிவாழ்க்கையே விரும்புவார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் பனிமலைகளை பார்த்ததே கிடையாது என சொன்னது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மங்கோலியா என்றால் செங்கிஸ்கான் தான் நினைவுக்கு வருவார். அவரை பற்றிவந்த புகழ்பெற்ற ஆங்கிலப்படத்தை பார்த்திருக்கிறீரா என நான் கேட்டேன். அப்படத்தை அவர் பார்த்ததில்லை என்று சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பெண்ணை அவர் வீட்டில் விட்டுவிட்டு எங்கள் விடுதிக்கு 8.00 மணிவாக்கில் திரும்பினேன். &lt;br /&gt;ஜேபி ஐயாவிடம் இருந்து ஹிந்துமதம் பற்றி தெரியாத பலத் தகவலை இச்சந்திப்பில் கலந்துகொண்டதால் தெரிந்துகொள்ள முடிந்தது. நம்முடன் சரிசமகாக இணையம் வழியாகவும் நேரிலும் உரையாடிவரும் ஒரு தமிழரை - அவர் அறிவாற்றலை பெற - உலகின் பலபகுதியில் இருக்கும் பல இனமக்கள் நாடி வருவது நமக்கும் பெருமைதானே!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;முகுந்தராஜ்&lt;br /&gt;பினாங்கு / மலேசியா&lt;br /&gt;தேதி: 7/ஜூன்/2003&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5446760-105500241478326792?l=thamizha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/105500241478326792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/105500241478326792'/><link rel='alternate' type='text/html' href='http://thamizha.blogspot.com/2003_06_01_archive.html#105500241478326792' title=''/><author><name>Thamizha!</name><uri>http://www.blogger.com/profile/13347443922925544827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5446760.post-105456791524118528</id><published>2003-06-02T23:31:00.000+08:00</published><updated>2003-06-02T23:31:56.010+08:00</updated><title type='text'></title><content type='html'>§º¡¾¨É µð¼õ ....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5446760-105456791524118528?l=thamizha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/105456791524118528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5446760/posts/default/105456791524118528'/><link rel='alternate' type='text/html' href='http://thamizha.blogspot.com/2003_06_01_archive.html#105456791524118528' title=''/><author><name>Thamizha!</name><uri>http://www.blogger.com/profile/13347443922925544827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry></feed>
